அவசர காவல் உதவிக்கு 100 எண் இருப்பது தான்பேரு ஆனால் அவர்கள்
உதவிக்கு வருவது என்னவோ
ஆயுசு முடிஞ்சு தான்...
அதுவும் கடமையை செய்ய
வருவதில்லை, கடமைக்கு
செல்ஃபி ஃபோட்டோ எடுத்துக் கொண்டு செல்ல வருகிறார்கள்.
பிரச்சனைகள் தீர்த்து வைப்பதில்லை,
பாதிக்கப் பட்டவர்களை கண்டு கொள்வதும் இல்லை,
கேட்டால் எங்களுக்கு 1008 வேலை
இருப்பதாக பதில் மட்டும்
சத்தமாக சொல்வார்கள்.
இதனாலே நிலுவையில் உள்ளன
ஏராலமான வழக்குகள், அதில்
சம்மந்த பட்டவர்களும் பாதி
பேர் உயிரோடு இருப்பதில்லை,
நிதியை இழந்து போனாலும்
நிதியை வாங்கிக் கொள்கிறார்கள்
வேறு ஒருவரின் மூலமாக, ஆனால்
நீதி மட்டும் வாங்கி தருவதில்லை.
இதனால் நன்றாக இருக்கும்
குடும்பத்தின் வாழ்கையும் பாதிக்கப் படுகிறது, குற்றவாளி நன்றாகத் தான்
இருக்கிறான், இதற்கு பதில் நன்றாக இருப்பவரும் குற்றவாளியாக மாறும்
நிலமைக்கு தள்ளப்படுகிறார்கள்.
அவர்கள் குடும்பமும் சின்னா பின்னமாக ஆகிவிடுகிறது.
மேல் அதிகாரிகளிடம் சென்றால்
மீண்டும் இவர்களிடமே அனுப்பி
விடுவார்கள், அவர்களும் சிறப்பாக
கடமையை செய்வது போல,
இன்னும் சில கிராமங்களில்
மிகவும் மோசமாக கொடுமையான
நிலையில் நடவடிக்கை இருக்கிறது.
எனக்கு தெரிந்த வரை இந்த
காவலர்களால் குற்றம் குறைந்த
பாடில்லை, இவர்களின்
அலட்சியத்தினாலும் பொறுப்பின்மை
காரணமாகவும் குற்றம் அதிகரித்துக்
கொண்டு தான் இருக்கிறது...!
இதற்கு முற்று புள்ளி இல்லை,
கமா வைத்து தொடர்ந்து கொண்டு
தான் இருக்கும் போல....!
இதனால் நேர்மையான
அதிகாரிகளுக்கும் அவபெயர் தான்
உண்டாகிறது, அவர்களின்
மன நிலையும் பாதிக்கப்படுகிறது...!